திங்கள், ஜனவரி 24, 2011

உங்களோடு சில நிமிடங்கள்...

76). கண்ட பொழுதிற் களித்தேன் கடையேன்! அன்று
தண்ட பாணியைத் தமிழ்க் கடவுளாக்கி அவன்
வண்டு கையளாம் வள்ளியை ஏற்றிட
பண்டேயவனுக் கருள்செய்த வல்லியே!

77) வல்லியின் வல்லபத்தைப் பாட ஒரு மொழியில்லை
செல்லுமிடமெல்லாம் தோன்று மவள் தோற்றத்தைக்
கல்லிலும் கண்டோமே கடவூர்ப்பதியினிலே! - எந்தன்
சொல்லில் நடமாடும் சுந்தரியின் வண்ணமெலாம்!

78) வண்ணத் திருக்கோலம் வரைந்தழைக்கும் பெண்டிருக்கு
எண்ணமெலாம் ஈடேறச் செய்திடுவாள் என்னன்னை! அன்று
மண்ணுலகும் விண்ணுலகும் ஈரடியால் அளந்தவனாம் மாயக்
கண்ணனவன் திருத் தங்கை புகழ்பாடல் எம் பணியே!

கருத்துகள் இல்லை: