ஐயனே...அமுதூட்டும் ரங்கனே!
ஐயமின்றி நின் தாள் பிடித்தேன்.
அழுதேன் என்றும் உனையே
தொழுவதற்கு நான்...
காணுமிடமெல்லாம்
கண்ணனே உனையன்றிக்
கலையேதுமுண்டோ?
நாலு குலங்களமைத்தாய் - இவ்வுலகம்
நாசமடைவதற்கோ?
கன்னடத்துக்
கனகதாசனுக்குக்
கருவறையில் நீ
உருத்திரும்பி நின்றாயே! இந்தக்
கந்தனுக்கு நீ
காட்சி தரும் நாளுமுண்டோ?
துயில் எழுகையிலெல்லாம் "என்
துயர் தீர வருகிறேன் ரங்கனே! "
என்றே நானும் அழுதமைக்குச்
சான்றும் வேண்டுமோ?
மனமிரங்கித் திருக்காட்சி தர
இனமொரு தடையோ ரங்கா?
கீழ்க்குலத்தில் படைத்தவனும் நீயே!
கீழிறங்கி வரமறுப்பதுமேனோ?
வரந்தந்தால் உன்னை வந்து காண்பேன்..!
கரங்குவித்து நின் தாளில் வீழ்வேன்...!
மறுப்பதும் நீயேயானால்
வெறுப்பதற்கில்லை..
பழியை உன்மேல் சாற்றி
அழித்து விட்டுப் போவேன்...
ஏனடா ரங்கா.. என்றைக்குத் திருக்காட்சி???
ஐயமின்றி நின் தாள் பிடித்தேன்.
அழுதேன் என்றும் உனையே
தொழுவதற்கு நான்...
காணுமிடமெல்லாம்
கண்ணனே உனையன்றிக்
கலையேதுமுண்டோ?
நாலு குலங்களமைத்தாய் - இவ்வுலகம்
நாசமடைவதற்கோ?
கன்னடத்துக்
கனகதாசனுக்குக்
கருவறையில் நீ
உருத்திரும்பி நின்றாயே! இந்தக்
கந்தனுக்கு நீ
காட்சி தரும் நாளுமுண்டோ?
துயில் எழுகையிலெல்லாம் "என்
துயர் தீர வருகிறேன் ரங்கனே! "
என்றே நானும் அழுதமைக்குச்
சான்றும் வேண்டுமோ?
மனமிரங்கித் திருக்காட்சி தர
இனமொரு தடையோ ரங்கா?
கீழ்க்குலத்தில் படைத்தவனும் நீயே!
கீழிறங்கி வரமறுப்பதுமேனோ?
வரந்தந்தால் உன்னை வந்து காண்பேன்..!
கரங்குவித்து நின் தாளில் வீழ்வேன்...!
மறுப்பதும் நீயேயானால்
வெறுப்பதற்கில்லை..
பழியை உன்மேல் சாற்றி
அழித்து விட்டுப் போவேன்...
ஏனடா ரங்கா.. என்றைக்குத் திருக்காட்சி???
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக