நமக்கு அறிமுகம் ஆகிய புரந்தரதாசர் மற்றும் கனகதாசர்.
இவர்களின் பெயரை உச்சரிக்கும்பொழுதே ஓர் இனம் புரியாத உணர்வும் துள்ளலும் மனத்துனுள் எழுவதைத் தவிர்க்கவே இயலாது.. பெங்களூருக்கு வருவதற்கு முன்னர் இவர்களைப் பற்றிய அறிமுகம் நமக்கு இல்லை.. வாழும் கலையில் யோகப் பயிற்சி பெற்ற பின் வாராந்திர பயிற்சிக்காகவும், சத்சங்கத்திற்காகவும் ஜே.பி நகரில் உள்ள மா ஆனந்த மயி பவனத்துக்குச் செல்வது வழக்கமாயிற்று. அங்கேதான் அழகிய கன்னட மொழிப் பாடல்களைக் கேட்க நேர்ந்தது.. முதலில் கன்னடம் புரியவில்லை. ஆனாலும் அங்கே யாதவ் என்றொரு ஆசிரியர் தனது அழகிய குரலில் பாடுவதோடு மட்டுமல்லாது அப்பாடல்களுக்கான விளக்கத்தை ஆங்கிலத்தில் தருவார். அற்புதமான அவ்வரிகளைக் கேட்கையிலே மனத்தில் தோன்றும் ஆனந்தத்திற்கு அளவே இருக்காது..
புரந்தரதாசரின் பாடல்கள், கனகதாசரின் பாடல்கள், பசவன்னா, அக்கமகாதேவி, குண்டப்பா இவர்களின் பாடல்கள் அனைத்தும் பக்தி ரசம் சொட்ட சொட்ட கிடைக்கும்.. (அந்த சமயத்தில் என்னுடைய வேலை நேரம் காலையில் இருந்ததால் சனிக்கிழமையன்று மாலையில் சத்சங்கம் செல்வதற்கு வசதியாக இருந்தது. ஆனால் தற்சமயம் மதியத்திற்குப் பின்னர் வேலை துவங்குவதால் சத்சங்கத்திற்கு போக முடியவில்லை)
திரு. யாதவ் அவர்களின் மூலமாக தாசரின் கீர்த்தனைகளில் நான் மெய் மறந்து போய்க்கொண்டிருக்கும் வேளையில் மங்களூருக்கு அருகில் உள்ள கமலஷெலே என்னும் கிராமத்துக்குப் போகும் வாய்ப்பு கிடைத்தது.. 2006 குரு பூர்ணிமாவை என்னால் மறக்கவே இயலாது.. கமலஷெலே கிராமத்திற்குப் போகும் வழியில் கர்நாடகாவின் பல தலங்களையும் சுற்றிப் பார்த்துக் கொண்டே போய்க்கொண்டிருந்தோம். சுப்ரமண்யா, தர்மஸ்தலா, இவற்றையெல்லாம் கண்டுவிட்டு நமது அன்னை அரசாளக்கூடிய கொல்லூரில் மூகாம்பிகையாக அவளைத் தரிசித்தோம். பின்னர் கமலஷெலே சென்றடைந்தோம்.. அங்கே குடி கொண்டுள்ள அன்னை துர்கா பரமேஸ்வரியின் ஆலயத்தில்தான் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன.
முதல்நாள் மாலை சத்சங்கத்தில்தான் அவரைக் கண்டேன்.. அவர் சாயண்ணா என்று அன்போடு அழைக்கப் படும் சுவாமி சூர்யபாதா அவர்கள். அச்சமயத்தில் அடியேனுக்குக் கன்னடம் அந்த அளவுக்கு வராது. அவரோ தூய்மையான கன்னடத்தில் பேசிப் பாடினார். தாசரின் பாடல்களைக் கேட்கையிலே என்னை மறந்து ஆடினேன்.. பொருள் புரியாமலேயே இந்தப் பாடல்கள் நம்மை வசீகரம் செய்கின்றனவே என்று எண்ணுகையில், சுவாமி அவர்கள் ஆங்கிலத்தில் அதற்குரிய பொருளை விளக்கினார். இப்படித்தான் புரந்தர தாசரின் பாடல்கள் நமக்கு அறிமுகமானது. அதன் பிறகும் இரண்டு ஆண்டுகள் 2007 மற்றும் 2008ம் ஆண்டுகளிலும் அந்த வாய்ப்பு எனக்குக் கிட்டியது.. பின்னர் வந்த ஆண்டுகளில் செல்ல முடியவில்லை... மிகவும் வருந்துகின்றேன்.. ஆனால் சாயண்ணா அவர்கள் பெங்களூரு வரும்பொழுது இங்கெல்லாம் நிகழும் ஞாயிறு சத்சங்கங்களை விடுவதில்லை...
இவை தமிழகத்திலும் பாடப்படுகின்றனவாம். ஆனால் அவற்றை சென்று கேட்டு மகிழ சங்கீத ஞானம் வேண்டுமாம்.. ஆனால் இங்கோ சத்சங்கத்தில் நாடோடிகளின் கீதமாக அனைவரும் இணைந்து பாடி இறைவனின் நாமத்தை உச்சரிக்கும்போது எழும் மகிழ்வே வேறு... நமக்கென்னவோ இந்த நாடோடி கீதமே பிடிக்கின்றது... எனது மனையாள் கருவுற்ற துவக்க நாட்களில் ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கே காளை கோயில் (புல் டெம்பிள்) சாலையில் உள்ள கோவர்த்தனா ஆலயத்திற்குச் செல்வோம். சில சமயங்களில் அங்கு வரும் பக்தர்கள் இனிமையான பாடல்களைப் பாடும்போது என்னை மறந்து கேட்டு நிற்பேன்.
சரி.. இனி புரந்தர தாசரின் கதையைக் காண்போம்..
கர்நாடகமாநிலத்தின் சிமோகா மாவட்டத்தில், தீர்த்தஹள்ளிக்கு அருகில் உள்ள க்ஷேமபுரா என்னும் ஊரில்தான் புரந்தரதாசர் வணிகக் குலத்தில் பிறந்தார். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் ஸ்ரீனிவாச நாயக்கர். தனது பதினாறாவது வயதில் சரஸ்வதிபாய் என்னும் பெண்ணைத் திருமணம் முடித்தார். இருபதாவது வயதில் தனது பெற்றோரின் மறைவுக்குப் பின்னர் தந்தையாரின் தொழிலைத் தானே ஏற்று நடத்த ஆரம்பித்தார். வைரங்களை வியாபாரம் செய்வதும், தங்க நகைகளை அடகுக்கு வாங்கிக் கடன் கொடுப்பதுமான தொழில் அது.. மிகவும் கஞ்சத்தனமானவர் ஸ்ரீனிவாச நாயக்கர். யாரேனும் பண உதவி என்று கேட்டால் அதற்கு ஈடாக எதையாவது கொடுத்தால் மட்டுமே உதவி செய்வார். இல்லையென்றால் மறுத்து விடுவார்.
அவரைத் தன் அடியவனாக்க விட்டலன் மனம் கொண்டான். அந்த நாட்களும் வந்தன... இந்நிகழ்வு நமக்கு காரைக்கால் அம்மையாரின் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வையும், பட்டினத்தார் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வையும் நினைவூட்டுகின்றது.
ஸ்ரீனிவாச நாயக்கரின் கடைக்கு ஓர் ஏழை அந்தணர் வந்தார்.
"ஐயா வணக்கம்.. என்னுடைய மகனுக்குப் பூணூல் கல்யாணம் ஏற்பாடு செய்திருக்கிறேன். தாங்கள் தங்களால் இயன்ற உதவியைச் செய்ய வேண்டும்" என்று அந்த ஏழை அந்தணர் வேண்டினார்.
"நல்லது.. அதற்கு ஈடாக ஏதாவது தங்க சாமானை வைக்க வேண்டுமே" என்று ஸ்ரீனிவாசர் கேட்க,
"என்னிடம் ஏதும் இல்லையே" என்று அந்த அந்தணர் உரைக்க "அப்படின்னா போய்விட்டு நாளைக்கு வாருங்கள்" என்று அனுப்பி விட்டார்.
இப்படியே தினமும் அந்த அந்தணர் வந்து ஸ்ரீனிவாச நாயக்கரை வேண்டுவதும், அவர் மறுப்பதுமாக நாட்கள் சென்று கொண்டிருந்தன... இந்நிலையில் அந்த நாளும் வந்தது.. அந்த நாள்தான் உலகுக்குப் புரந்தர தாசரை விட்டலன் அறிமுகம் செய்த நாள்.. தன்னை மறந்து தனத்தில் லயித்துக் கொண்டிருந்த தன் தாசனைத் தன்னோடு இணைத்துக் கொண்ட நாள்..
அன்று அதே போல் அந்த ஏழை அந்தணர் ஸ்ரீனிவாச நாயக்கரின் கடைக்கு சென்று உதவி கேட்க அவர் மறுத்து அவரைத் திருப்பி அனுப்பி விட்டார். ஏற்கெனவே இதைப் பணியாள் மூலம் அறிந்திருந்த சரஸ்வதி பாய் அந்த அந்தணரைத் தன்னை வந்து காணச் சொல்லி அனுப்பி இருந்தாள். இதன்படி அந்த ஏழையும் சரஸ்வதிபாயை வந்து சந்தித்தார்.
"ஐயா.. இதோ எனது மூக்குத்தியை வைத்துக் கொள்ளுங்கள். இதை விற்று தங்கள் மகனின் பூணூல் கல்யாணத்தை சிறப்பாக நடத்துங்கள்" என்று தனது மூக்குத்தியைக் கழற்றிக் கொடுத்தார்.
அவரும் "மிக்க நன்றி அம்மா" என்று சொல்லி விட்டு மகிழ்ச்சியுடன் ஸ்ரீனிவாச நாயக்கரின் கடையை நோக்கி ஓடினார்..
"ஐயா. தங்க நகைக்கு ஈடாக பணம் கொடுப்பதாகச் சொன்னீர்களே... என்னிடம் ஒரு நகை உள்ளது. இதற்குக் கொடுப்பீர்களா?" என்று வினவினார்.
"கொடுங்கள் பார்க்கலாம்" என்று அந்த நகையை வாங்கிய நாயக்கருக்கு அதிர்ச்சி... இது தனது மனைவியின் நகையாயிற்றே என்று எண்ணியவாறே "ஐயா சற்றே பொறுங்கள். இப்போது வந்து விடுகின்றேன்" என்று அவரைக் காக்க வைத்து விட்டு வீட்டுக்கு விரைந்தார்.
இல்லம் வந்து தன் இல்லாளிடம் "உன் மூக்குத்தி எங்கே?" என்று கேட்டார்.
"அதை சுத்தம் செய்து அங்கே வைத்திருக்கின்றேன். எதற்கு..?" என்று சரஸ்வதி பாய் கேட்க, "எடுத்து வா.. நான் பார்க்க வேண்டும்" என்று நாயக்கர் உரைக்க நடுக்கத்துடன் உள்ளே சென்றார் சரஸ்வதி பாய்.
"இறைவா... இரக்கமுள்ள மனதுக்கு இது போன்ற சோதனை வரலாமா? ஏழைக்கு இரங்கினேன்.. இதோ என் கணவனிடம் மாட்டிக் கொண்டேனே... என்னைக் காப்பாற்று" என்று வேண்டியவாறு தனது நகைப் பெட்டியைத் திறந்தார்..
என்ன ஆச்சரியம்...! அங்கே தனது மூக்குத்தி அப்படியே இருந்தது...
இதென்ன ஆச்சரியம் என்று வியந்து கொண்டே அதைத் தனது கணவருக்கு வந்து காட்டினார். அவரும் தன் கையிலிருந்த அந்த மூக்குத்தியையும் இதையும் ஒப்பிட்டுப் பார்த்து தான் தவறாக எண்ணி விட்டோமே என்று நினைக்க, சரஸ்வதி பாய் நடந்த உண்மையைக் கூறி மன்னிப்பு கேட்டார்...
"அய்யோ அந்த ஏழைக்கு இரங்கிய உனக்கு இறைவன் இரங்கினானா... " என்று சொல்லிக் கடையை நோக்கி ஓடினார்... அங்கே அந்த ஏழை இல்லை...
"விட்டலா... நீயே வந்து என்னை சோதனை செய்தாயா... " என்று புலம்பியவாறே இல்லம் வந்து, தன் மனையாளை நோக்கி, "இத்தனை நாள் என்னைக் காணவந்தவன் அந்த விட்டலன் என்பதை அறியாது அவனை அலைக்கழித்தேனே... உன்னை அவன் வந்து சந்தித்த முதல் நாளே நீ அவனுக்குக் கொடுத்து பெருமை செய்தாயே" என்று புலம்பி... தன் சொத்துக்களையெல்லாம் ஏழை எளியர்களுக்குத் தானம் செய்தார்.. புரந்தர விட்டலனின் தாசனாக தனது பெயரை புரந்தரதாசன் என்று மாற்றிக் கொண்டார்.
கண்ணனின் மேல் கீதங்களை மழையாகப் பாடினார்...
இன்றும் அவரது பாடல்களைக் கேட்கையில் உள்ளம் உருகுவதைத் தவிர்க்க இயலாது.. கர்நாடக சங்கீதத்தின் தந்தையாக இவரே கருதப் படுகின்றார்...
மேலும் நாரதரின் மனுக்குல அவதாரமாகவும் போற்றப் படுகின்றார்.. தனது அனைத்துப் பாடல்களில் ஈற்றடியிலும் புரந்தர விட்டலா என்ற பதத்தைப் பயன்படுத்தியுள்ளார்...
அவரது பாடல்கள் அனைத்தும் பொக்கிஷங்கள்....வரும் நாட்களில் நான் அறிந்த அவரது சில பாடல்களையும், அவற்றிற்கான தமிழ் விளக்கத்தையும் பார்ப்போம்.. அதற்கு முன்னதாக கனக தாசரின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு நிகழ்வை அடுத்த மடலில் பார்த்து விடுவோம்..
மீண்டும் சந்திப்போம். நன்றி..
இவர்களின் பெயரை உச்சரிக்கும்பொழுதே ஓர் இனம் புரியாத உணர்வும் துள்ளலும் மனத்துனுள் எழுவதைத் தவிர்க்கவே இயலாது.. பெங்களூருக்கு வருவதற்கு முன்னர் இவர்களைப் பற்றிய அறிமுகம் நமக்கு இல்லை.. வாழும் கலையில் யோகப் பயிற்சி பெற்ற பின் வாராந்திர பயிற்சிக்காகவும், சத்சங்கத்திற்காகவும் ஜே.பி நகரில் உள்ள மா ஆனந்த மயி பவனத்துக்குச் செல்வது வழக்கமாயிற்று. அங்கேதான் அழகிய கன்னட மொழிப் பாடல்களைக் கேட்க நேர்ந்தது.. முதலில் கன்னடம் புரியவில்லை. ஆனாலும் அங்கே யாதவ் என்றொரு ஆசிரியர் தனது அழகிய குரலில் பாடுவதோடு மட்டுமல்லாது அப்பாடல்களுக்கான விளக்கத்தை ஆங்கிலத்தில் தருவார். அற்புதமான அவ்வரிகளைக் கேட்கையிலே மனத்தில் தோன்றும் ஆனந்தத்திற்கு அளவே இருக்காது..
புரந்தரதாசரின் பாடல்கள், கனகதாசரின் பாடல்கள், பசவன்னா, அக்கமகாதேவி, குண்டப்பா இவர்களின் பாடல்கள் அனைத்தும் பக்தி ரசம் சொட்ட சொட்ட கிடைக்கும்.. (அந்த சமயத்தில் என்னுடைய வேலை நேரம் காலையில் இருந்ததால் சனிக்கிழமையன்று மாலையில் சத்சங்கம் செல்வதற்கு வசதியாக இருந்தது. ஆனால் தற்சமயம் மதியத்திற்குப் பின்னர் வேலை துவங்குவதால் சத்சங்கத்திற்கு போக முடியவில்லை)
திரு. யாதவ் அவர்களின் மூலமாக தாசரின் கீர்த்தனைகளில் நான் மெய் மறந்து போய்க்கொண்டிருக்கும் வேளையில் மங்களூருக்கு அருகில் உள்ள கமலஷெலே என்னும் கிராமத்துக்குப் போகும் வாய்ப்பு கிடைத்தது.. 2006 குரு பூர்ணிமாவை என்னால் மறக்கவே இயலாது.. கமலஷெலே கிராமத்திற்குப் போகும் வழியில் கர்நாடகாவின் பல தலங்களையும் சுற்றிப் பார்த்துக் கொண்டே போய்க்கொண்டிருந்தோம். சுப்ரமண்யா, தர்மஸ்தலா, இவற்றையெல்லாம் கண்டுவிட்டு நமது அன்னை அரசாளக்கூடிய கொல்லூரில் மூகாம்பிகையாக அவளைத் தரிசித்தோம். பின்னர் கமலஷெலே சென்றடைந்தோம்.. அங்கே குடி கொண்டுள்ள அன்னை துர்கா பரமேஸ்வரியின் ஆலயத்தில்தான் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன.
முதல்நாள் மாலை சத்சங்கத்தில்தான் அவரைக் கண்டேன்.. அவர் சாயண்ணா என்று அன்போடு அழைக்கப் படும் சுவாமி சூர்யபாதா அவர்கள். அச்சமயத்தில் அடியேனுக்குக் கன்னடம் அந்த அளவுக்கு வராது. அவரோ தூய்மையான கன்னடத்தில் பேசிப் பாடினார். தாசரின் பாடல்களைக் கேட்கையிலே என்னை மறந்து ஆடினேன்.. பொருள் புரியாமலேயே இந்தப் பாடல்கள் நம்மை வசீகரம் செய்கின்றனவே என்று எண்ணுகையில், சுவாமி அவர்கள் ஆங்கிலத்தில் அதற்குரிய பொருளை விளக்கினார். இப்படித்தான் புரந்தர தாசரின் பாடல்கள் நமக்கு அறிமுகமானது. அதன் பிறகும் இரண்டு ஆண்டுகள் 2007 மற்றும் 2008ம் ஆண்டுகளிலும் அந்த வாய்ப்பு எனக்குக் கிட்டியது.. பின்னர் வந்த ஆண்டுகளில் செல்ல முடியவில்லை... மிகவும் வருந்துகின்றேன்.. ஆனால் சாயண்ணா அவர்கள் பெங்களூரு வரும்பொழுது இங்கெல்லாம் நிகழும் ஞாயிறு சத்சங்கங்களை விடுவதில்லை...
இவை தமிழகத்திலும் பாடப்படுகின்றனவாம். ஆனால் அவற்றை சென்று கேட்டு மகிழ சங்கீத ஞானம் வேண்டுமாம்.. ஆனால் இங்கோ சத்சங்கத்தில் நாடோடிகளின் கீதமாக அனைவரும் இணைந்து பாடி இறைவனின் நாமத்தை உச்சரிக்கும்போது எழும் மகிழ்வே வேறு... நமக்கென்னவோ இந்த நாடோடி கீதமே பிடிக்கின்றது... எனது மனையாள் கருவுற்ற துவக்க நாட்களில் ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கே காளை கோயில் (புல் டெம்பிள்) சாலையில் உள்ள கோவர்த்தனா ஆலயத்திற்குச் செல்வோம். சில சமயங்களில் அங்கு வரும் பக்தர்கள் இனிமையான பாடல்களைப் பாடும்போது என்னை மறந்து கேட்டு நிற்பேன்.
சரி.. இனி புரந்தர தாசரின் கதையைக் காண்போம்..
கர்நாடகமாநிலத்தின் சிமோகா மாவட்டத்தில், தீர்த்தஹள்ளிக்கு அருகில் உள்ள க்ஷேமபுரா என்னும் ஊரில்தான் புரந்தரதாசர் வணிகக் குலத்தில் பிறந்தார். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் ஸ்ரீனிவாச நாயக்கர். தனது பதினாறாவது வயதில் சரஸ்வதிபாய் என்னும் பெண்ணைத் திருமணம் முடித்தார். இருபதாவது வயதில் தனது பெற்றோரின் மறைவுக்குப் பின்னர் தந்தையாரின் தொழிலைத் தானே ஏற்று நடத்த ஆரம்பித்தார். வைரங்களை வியாபாரம் செய்வதும், தங்க நகைகளை அடகுக்கு வாங்கிக் கடன் கொடுப்பதுமான தொழில் அது.. மிகவும் கஞ்சத்தனமானவர் ஸ்ரீனிவாச நாயக்கர். யாரேனும் பண உதவி என்று கேட்டால் அதற்கு ஈடாக எதையாவது கொடுத்தால் மட்டுமே உதவி செய்வார். இல்லையென்றால் மறுத்து விடுவார்.
அவரைத் தன் அடியவனாக்க விட்டலன் மனம் கொண்டான். அந்த நாட்களும் வந்தன... இந்நிகழ்வு நமக்கு காரைக்கால் அம்மையாரின் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வையும், பட்டினத்தார் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வையும் நினைவூட்டுகின்றது.
ஸ்ரீனிவாச நாயக்கரின் கடைக்கு ஓர் ஏழை அந்தணர் வந்தார்.
"ஐயா வணக்கம்.. என்னுடைய மகனுக்குப் பூணூல் கல்யாணம் ஏற்பாடு செய்திருக்கிறேன். தாங்கள் தங்களால் இயன்ற உதவியைச் செய்ய வேண்டும்" என்று அந்த ஏழை அந்தணர் வேண்டினார்.
"நல்லது.. அதற்கு ஈடாக ஏதாவது தங்க சாமானை வைக்க வேண்டுமே" என்று ஸ்ரீனிவாசர் கேட்க,
"என்னிடம் ஏதும் இல்லையே" என்று அந்த அந்தணர் உரைக்க "அப்படின்னா போய்விட்டு நாளைக்கு வாருங்கள்" என்று அனுப்பி விட்டார்.
இப்படியே தினமும் அந்த அந்தணர் வந்து ஸ்ரீனிவாச நாயக்கரை வேண்டுவதும், அவர் மறுப்பதுமாக நாட்கள் சென்று கொண்டிருந்தன... இந்நிலையில் அந்த நாளும் வந்தது.. அந்த நாள்தான் உலகுக்குப் புரந்தர தாசரை விட்டலன் அறிமுகம் செய்த நாள்.. தன்னை மறந்து தனத்தில் லயித்துக் கொண்டிருந்த தன் தாசனைத் தன்னோடு இணைத்துக் கொண்ட நாள்..
அன்று அதே போல் அந்த ஏழை அந்தணர் ஸ்ரீனிவாச நாயக்கரின் கடைக்கு சென்று உதவி கேட்க அவர் மறுத்து அவரைத் திருப்பி அனுப்பி விட்டார். ஏற்கெனவே இதைப் பணியாள் மூலம் அறிந்திருந்த சரஸ்வதி பாய் அந்த அந்தணரைத் தன்னை வந்து காணச் சொல்லி அனுப்பி இருந்தாள். இதன்படி அந்த ஏழையும் சரஸ்வதிபாயை வந்து சந்தித்தார்.
"ஐயா.. இதோ எனது மூக்குத்தியை வைத்துக் கொள்ளுங்கள். இதை விற்று தங்கள் மகனின் பூணூல் கல்யாணத்தை சிறப்பாக நடத்துங்கள்" என்று தனது மூக்குத்தியைக் கழற்றிக் கொடுத்தார்.
அவரும் "மிக்க நன்றி அம்மா" என்று சொல்லி விட்டு மகிழ்ச்சியுடன் ஸ்ரீனிவாச நாயக்கரின் கடையை நோக்கி ஓடினார்..
"ஐயா. தங்க நகைக்கு ஈடாக பணம் கொடுப்பதாகச் சொன்னீர்களே... என்னிடம் ஒரு நகை உள்ளது. இதற்குக் கொடுப்பீர்களா?" என்று வினவினார்.
"கொடுங்கள் பார்க்கலாம்" என்று அந்த நகையை வாங்கிய நாயக்கருக்கு அதிர்ச்சி... இது தனது மனைவியின் நகையாயிற்றே என்று எண்ணியவாறே "ஐயா சற்றே பொறுங்கள். இப்போது வந்து விடுகின்றேன்" என்று அவரைக் காக்க வைத்து விட்டு வீட்டுக்கு விரைந்தார்.
இல்லம் வந்து தன் இல்லாளிடம் "உன் மூக்குத்தி எங்கே?" என்று கேட்டார்.
"அதை சுத்தம் செய்து அங்கே வைத்திருக்கின்றேன். எதற்கு..?" என்று சரஸ்வதி பாய் கேட்க, "எடுத்து வா.. நான் பார்க்க வேண்டும்" என்று நாயக்கர் உரைக்க நடுக்கத்துடன் உள்ளே சென்றார் சரஸ்வதி பாய்.
"இறைவா... இரக்கமுள்ள மனதுக்கு இது போன்ற சோதனை வரலாமா? ஏழைக்கு இரங்கினேன்.. இதோ என் கணவனிடம் மாட்டிக் கொண்டேனே... என்னைக் காப்பாற்று" என்று வேண்டியவாறு தனது நகைப் பெட்டியைத் திறந்தார்..
என்ன ஆச்சரியம்...! அங்கே தனது மூக்குத்தி அப்படியே இருந்தது...
இதென்ன ஆச்சரியம் என்று வியந்து கொண்டே அதைத் தனது கணவருக்கு வந்து காட்டினார். அவரும் தன் கையிலிருந்த அந்த மூக்குத்தியையும் இதையும் ஒப்பிட்டுப் பார்த்து தான் தவறாக எண்ணி விட்டோமே என்று நினைக்க, சரஸ்வதி பாய் நடந்த உண்மையைக் கூறி மன்னிப்பு கேட்டார்...
"அய்யோ அந்த ஏழைக்கு இரங்கிய உனக்கு இறைவன் இரங்கினானா... " என்று சொல்லிக் கடையை நோக்கி ஓடினார்... அங்கே அந்த ஏழை இல்லை...
"விட்டலா... நீயே வந்து என்னை சோதனை செய்தாயா... " என்று புலம்பியவாறே இல்லம் வந்து, தன் மனையாளை நோக்கி, "இத்தனை நாள் என்னைக் காணவந்தவன் அந்த விட்டலன் என்பதை அறியாது அவனை அலைக்கழித்தேனே... உன்னை அவன் வந்து சந்தித்த முதல் நாளே நீ அவனுக்குக் கொடுத்து பெருமை செய்தாயே" என்று புலம்பி... தன் சொத்துக்களையெல்லாம் ஏழை எளியர்களுக்குத் தானம் செய்தார்.. புரந்தர விட்டலனின் தாசனாக தனது பெயரை புரந்தரதாசன் என்று மாற்றிக் கொண்டார்.
கண்ணனின் மேல் கீதங்களை மழையாகப் பாடினார்...
இன்றும் அவரது பாடல்களைக் கேட்கையில் உள்ளம் உருகுவதைத் தவிர்க்க இயலாது.. கர்நாடக சங்கீதத்தின் தந்தையாக இவரே கருதப் படுகின்றார்...
மேலும் நாரதரின் மனுக்குல அவதாரமாகவும் போற்றப் படுகின்றார்.. தனது அனைத்துப் பாடல்களில் ஈற்றடியிலும் புரந்தர விட்டலா என்ற பதத்தைப் பயன்படுத்தியுள்ளார்...
அவரது பாடல்கள் அனைத்தும் பொக்கிஷங்கள்....வரும் நாட்களில் நான் அறிந்த அவரது சில பாடல்களையும், அவற்றிற்கான தமிழ் விளக்கத்தையும் பார்ப்போம்.. அதற்கு முன்னதாக கனக தாசரின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு நிகழ்வை அடுத்த மடலில் பார்த்து விடுவோம்..
மீண்டும் சந்திப்போம். நன்றி..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக