நின்னை வரமொன்று கேட்பேன் ரங்கா!
என்னை நின்றன் அடியவனாக்கு!
பிறப்பினைத் தகுதி சொல்லி என்னைப்
பிரிந்திரு என்று சொல்லுதல் முறையோ?
மூட மாந்தருக்குத் தெரியுமோ நம்
முந்தைய உறவு எல்லாம்?
கண்ணனாய் நீ என்றன் குருவானபோது
கண்ணற்று நின்ற பாவியடா ரங்கா!
நரசிங்கமாய் வந்து நரனையழித்தபடி
கரங்கொண்டு என்றன் குறையுமழிப்பாய்!
இனியொரு தாய்க்கு நான் கருவாக இயலுமா?
மனிதனாய் மீண்டாலும் மனந்தான் அறியுமோ?
அரங்க மாநகர் தன்னில்
அழகுறப் பள்ளி கொண்ட
எந்தை ரங்கனே!
அழைப்பாயோ என்னை நின்
அழகிய மேனி காண? இல்லை
அழிப்பாயோ இவ்வுயிர் தாங்கும்
ஆக்கையை?
கோபுரம் மட்டும் காண
கோடி ஆசை கொண்டேன்!
நின்றன்
கோலவிழியில் வீழ
கோடிமுறை தொழுது நின்றேன்!
ஏனடா ரங்கா! என்றைக்குத் திருக்காட்சி?
என்னை நின்றன் அடியவனாக்கு!
பிறப்பினைத் தகுதி சொல்லி என்னைப்
பிரிந்திரு என்று சொல்லுதல் முறையோ?
மூட மாந்தருக்குத் தெரியுமோ நம்
முந்தைய உறவு எல்லாம்?
கண்ணனாய் நீ என்றன் குருவானபோது
கண்ணற்று நின்ற பாவியடா ரங்கா!
நரசிங்கமாய் வந்து நரனையழித்தபடி
கரங்கொண்டு என்றன் குறையுமழிப்பாய்!
இனியொரு தாய்க்கு நான் கருவாக இயலுமா?
மனிதனாய் மீண்டாலும் மனந்தான் அறியுமோ?
அரங்க மாநகர் தன்னில்
அழகுறப் பள்ளி கொண்ட
எந்தை ரங்கனே!
அழைப்பாயோ என்னை நின்
அழகிய மேனி காண? இல்லை
அழிப்பாயோ இவ்வுயிர் தாங்கும்
ஆக்கையை?
கோபுரம் மட்டும் காண
கோடி ஆசை கொண்டேன்!
நின்றன்
கோலவிழியில் வீழ
கோடிமுறை தொழுது நின்றேன்!
ஏனடா ரங்கா! என்றைக்குத் திருக்காட்சி?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக