பளபளன்னு ரோடு போட்டாவ....!
படபடன்னு அமைச்சருவ வந்தாவ...!
எல்லா எம்.எல்.ஏக்களும்எங்கூருக்கு வந்துட்டாவ..!.
அமைச்சரைப் பாக்கையிலே மக்கஅழகழகா சிரிச்சாவ...!
அவிய போன பின்னாடி
அடங்கொப்புரானேன்னு மலைச்சாவ...!
ஆனாலும் செஞ்சாவய்யா..
அஞ்சு லெட்சம் எங்க கோயிலுக்கு...!
பெருமையாத்தான் இருக்கு
பக்கத்து தொகுதிக்காரன் பாவிப்பய சாவலியேன்னும் போது...!
(சாத்தான் குளம் இடைத்தேர்தலின்போது எழுதியது. நேற்றைய தினம் எனது புத்தகங்களை அடுக்கும் போது கிடைத்தது. உங்கள் பார்வைகாக.....)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக