வெள்ளி, ஜனவரி 13, 2012

ஓர் இசைப்பாட்டு (பொங்கல் வாழ்த்துக் கவிதை.. ஐயா நடராசனிடமிருந்து)

நம் கவிதைக்கு இசைவாக அழகுதமிழில் நல்லதொரு கவிதையினை வடித்துள்ளார் ஐயா
கல்பட்டு நடராசன் அவர்கள்.. நண்பர்களுக்கா அன்னாரது கவிதை....
From: Natrajan Kalpattu Narasimhan <knn1929@gmail.com>

அபிராமி மகன் கந்த சாமி
நாக ராஜன் அழைத்தால்
சிவகாமி பேரன் கல்பட்டு
நட ராஜன் நானும் அழைத்திடல் வேண்டாமோ
அத் தை மகளை

வா வா தை மகளே வா வா
வா வா என் அத்
தை மகளே வா வா

சிந்தை யெல்லாம் உன் மேல் வைத்தேன்
முந்தைப் பிறவியில் நீ யெந்தன்
இல்லாளாய் இருந்திருக்க வேண்டும்

இத் தை பிறந்தால்
உன் கை பிடிப்பேன்
சொத்தாய் நானுனைக் காப்பேன்

வா வா தை மகளே வா வா
வா வா என் அத்
தை மகளே வா வா

--
நடராஜன் கல்பட்டு

எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே

கருத்துகள் இல்லை: