வெள்ளி, பிப்ரவரி 02, 2018

அலைகளும் என் நினைவுகளும்....

குறுமணலில் கால் பதித்தவளாய்
நின்றேன்.. நடந்தேன்... அமர்ந்தேன்...
அலைகள் என்னை வந்து முட்டிச் சென்றன...
ஏதோ என்னிடம் பேசுவதற்காக...
நானும் அமர்ந்தேன் அதை வினவுவதற்காக....
பார்த்தேன்... புரிந்தேன்... உணர்ந்தேன்....
நானும் கடலும் ஒன்றுதான்...
அதன்
அலைகளும் ஓய்வதில்லை...
என்
நினைவுகளும் ஓய்வதில்லை...
-
எழுதியது... கெத்சியாள் இருதயராஜ்.

கருத்துகள் இல்லை: