செவ்வாய், ஆகஸ்ட் 03, 2010

விடுதலையின் அடையாளம்

முட்டை உருத் தோன்றி
முழுவுடலும் புழுவாகி..
எத்தனையோ தடை தாண்டி..
ஏனேனோ இரை தின்று
நித்தம் தவம் செய்து
நீளுடல் நீங்கியபின்
வண்ண மெல்லுடலும்
வாய்ப்பரிய நன்சிறகும்
சின்னஞ்சிறு கொம்பும்
சீரடிகள் ஓராறும்
கொண்டெமைக் கொள்ளை செய்யும்
சின்னஞ்சிறு வண்ணப் பூச்சி...
விண்ணைக் காணும் கண்களுக்கு
விருந்தளிக்கும் நீ...
விடுதலையின் அடையாளம்...
பரிணாம மாற்றத்தில்
பட்டம் பெற்ற உன்னை...
வைத்தீஸ்வரிக்காக
வலையில் பிடிக்க மனமில்லை...
ஏனெனில்
நான் எஜமான் இல்லை...

கருத்துகள் இல்லை: